×

மளிகை கடையில் ₹2 ஆயிரம் திருட்டு

தர்மபுரி, பிப்.29: தர்மபுரி அடுத்த மகேந்திரமங்கலம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (39). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை மற்றும் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 26ம் தேதி, வழக்கம் போல் வேலை முடிந்து, கடையை அடைத்து விட்டு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்த போது, கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், கடையில் வைத்திருந்த ₹2 ஆயிரம் பணம் மற்றும் கிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மளிகை கடையில் ₹2 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sivakumar ,Mahendramangalam Kamaraj Nagar ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்